"வருமான வரித்துறை தினகரனை பணிய வைக்க முயற்சிக்கிறது"

டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில அரசின் துணையோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினரும்,டிடிவி தினகரன் ஆதரவாளருமான ஏ.பி. நாகராஜ் கோவில்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் அம்மா பிம்பத்தை சிதைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக அதிமுக பிளவுபடுத்தப்பட்டதாகவும், அதிமுக கட்சியை அழிக்கும் நடவடிக்கைக்கு பலரும் துணை போனதாகவும் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி பலப்பட்டு விடும் என்பதாலும், சசிகலா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதிமுக பிளவுபட்டு விடுமென்பதாலும்,தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறிய அவர், நீதித்துறையை தவிர்த்த அனைத்து துறைகளும் அரசின் கைப்பாவைகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஒராண்டில் பல வருமான வரித்துறை சோதனைகள் நடந்தாலும், வேண்டப்பட்டவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறிய அவர், சேகர்ரெட்டி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனை எதற்காக நடத்தப்பட்டது? என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

இந்த வருமான வரித்துறை சோதனை மாநில அரசின் துணையோடு நடைபெறுவதாகவும், டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும், வருமான வரித்துறை மிரட்டலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது எனவும் நாகராஜ் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கைப்பற்றும் முயற்சியாக கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...